tamilnadu

img

தேசம் காக்க ஆகஸ்ட் 8, 10 களம் அமைத்து போரிடுவோம்! - வி.குமார்

கொரோனா ஊரடங்கு காலத்தில் 14 கோடிக்கும் மேற்பட்ட தொழிலா ளர்கள் வேலை இழந்து, வாழ்வா தாரத்தை இழந்து, வேதனையின் விளிம்பில் நிற்கின்றனர். குறிப்பாக ஆட்டோ மொபைல், இன்ஜினியரிங், தகவல் தொழில்நுட்பம்  ஜவுளி, ஆயுத்த ஆடை, கட்டுமானம், கார்மெண்ட்ஸ் போன்ற துறைகளோடு , விசைத்தறி, கைத்தறி, தீப்பெட்டி, தோட்டம், தோல் பொருள், சாலை போக்குவரத்து, ஆட்டோ, நடைபாதை வியாபாரிகள், மீன்பிடி உள்ளிட்ட 54 வகையான முறைசாரா தொழி லாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். தேசத்தின் செல்வங்க ளை உற்பத்தி செய்யும் தொழிலாளர்கள் அவர்தம் குடும்பத் தினர் இன்று ஒருவேலை உணவுக்குக் கூட வழியில்லா மல் விழிபிதுங்கி நிற்கின்றனர்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்

இந்தியாவில் சுமார் 8கோடி தொழிலாளர்கள் ஊர்விட்டு ஊர் சென்று கூலி வேலை செய்வதாக புள்ளி விபரம் தெரிவிக்கப்படுகிறது. இத்தொழிலாளர்கள் வேலை இழந்து, வருமானம் இழந்து பசி-பட்டினியோடு சொந்த ஊர் பயணப்படுவதை நாம் பார்த்துக் கொண்டி ருக்கின்றோம்.  இத்தொழிலாளர்கள்  மனைவி குழந்தைக ளோடு ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் நடந்து சென்ற போது சந்தித்த துன்பங்களும் துயரங்களும் ஏராளம். சிலர் பயண கலைப்பாக ரயில் தண்டவாளத்தில் படுத்துறங்கியபோது ரயில் மோதி விபத்துக்குள்ளான தையும், பேருந்து, லாரி மோதி இறந்ததையும் பல கர்ப்பிணி பெண்கள்  சாலையோரங்களில் பிரசவித்ததையும், தாய் இறந்ததை கூட தெரியாமல் பிணத்துடன் விளையாடிய குழந் தையும், நடக்கமுடியாமல், அழுதபடி நடந்து சென்ற குழந் தைகளையும் காட்சிகளாக பார்த்தபோது  நெஞ்சே வெடித்திடும் போல் இருந்தது. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களின் ஊர்களுக்கு சென்றடைவதற்கு முன்பே 299 பேர் உயிர் இழந்த செய்தி மிகவும் அதிர்ச்சியளிப்பதாகும். 

சுயசார்பு

இந்தியா ஒரு சுயசார்பு நாடாக திகழ வேண்டும் என்பது இன்றைய ஆட்சியாளர்களின் கண்டுபிடிப்பு அல்ல. சுயசார்பு என்பது நமது தேச விடுதலை போராட்டத்தின் ஒரு வேட்கையாகவே இருந்தது. இந்திய மக்களின் இந்த வேட்கையை நிறைவேற்றுவதற்காக பொதுத்துறை நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால் மோடி அரசு “சுயசார்பு“  என்ற வார்த்தைக்கான உண்மையான பொருளையே மாற்றிவிட்டது.  “ஆத்ம நிர்பான் பாரத் அபியான்“  (சுயசார்பான இந்தியா) என்பதன் உண்மை நிலவரம் என்ன? அந்நிய முதலீடு கள் தங்கு தடையின்றி அனுமதிக்கவும் அதை உள்நாட்டு நிறுவனங்கள் ஏற்றுக்கொள்ளவும் வழிவகுக்கப்பட்டுள் ளது. 70 ஆண்டுகளாக தொழில் துறையிலும், சேவைத் துறையிலும் நாம் கட்டி காப்பாற்றி வளர்த்து வந்த சுயசார்புத் தன்மைக்கு வேட்டுவைத்துள்ளது. அனைத்துத் துறையிலும் தனியார்மயம் முன்னிறுத்தப்படும் என பகிரங்கமாக அறிவித்துள்ளது. 

பாதுகாப்புத்துறை

நாட்டின் பாதுகாப்புத் துறைக்கான உற்பத்திகள் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் மூலம் தனியார் கைகளில் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. 74சதவீத நேரடி அந்நிய முதலீடு சாதாரண வழிகளிலேயே அனுமதிக்கப்படுகிறது. பாதுகாப்பு தளவாட தயாரிப்பு நிலையே பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ரபேல் விமான பேரத்தில் கண்டது போல் தொழில் நுட்ப அறிவு பரிமாற்றம் நமக்கு கிடைக்காது. ராணுவ தளவாட உற்பத்தியில் இயங்கும் 41 நிறுவனங்களும், ராணுவ வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி அமைப்பும் கூட தனியார் துறைக்கு தள்ளப்படும்.

நிலக்கரி

நிலக்கரி மற்றும் கனிமவளங்களை தனியாருக்கு அள்ளி கொடுக்க பாஜக அரசு பல்வேறு வழிகளில் செயல்பட்டு வருகிறது. வியாபார ரீதியில் நிலக்கரி சுரங்கங்க ளை இயக்க அந்நிய நாடு உட்பட தனியார் நிறுவனங்களு க்கு அள்ளித்தர சட்டங்கள் மாற்றப்படுகின்றன. மின்சாரம், இரும்பு உற்பத்தி, அலுமினியம், சிமெண்ட், உரம், உற்பத்தி போன்ற தொழில்களுக்கு நிலக்கரி ஒரு இன்றியமையாத பொருளாகும். கேந்திரமாக இருக்கக்கூடிய இத்துறையை தனியாருக்கு கொடுக்கப்படும் அனுமதி என்பது மின்சார உற்பத்தி உட்பட அனைத்தும் கடுமையாக பாதிக்கும்.

வான்வழி போக்குவரத்து

ஏர் இந்தியா விமான சேவை மட்டுமல்லாமல் இலாப கரமாக இயங்கும் பல விமான நிலையங்களும் கூட தனியார் கையில் கொடுக்கப்படுகின்றன. இந்திய ஆகாய எல்லைகளை அந்நிய நாட்டு விமான கம்பெனிகள் கிட்டத் தட்ட எந்த வித கட்டுப்பாடுகளும் இன்றி தாராளமாக பயன் படுத்திக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது. 

வான்வெளி ஆராய்ச்சி

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) 1969ல் துவக்கப்பட்டது. அரைநூற்றாண்டு கால பகுதி யில் நமது விண்வெளி விஞ்ஞானிகள் இஸ்ரோவின் ஒப்பற்ற விஞ்ஞான சாதனைகளுடன் பிரபலமான பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ராக்கெட்டுகளை உருவாக்கி செயற்கைக்கோள்களை நிலவு, செவ்வாய் மற்றும் பிற கிரக ஆய்வுகளுக்கு வடிவமைத்தல் மற்றும் ஏவுதல் ஆகிய பணிகளில் சிறந்து விளங்கி வருகிறது. பிற நாடுகளுக்கு வணிக ரீதியில்  செயற்கைக்கோளை ஏவுவதில் இந்தியா ஏற்கனவே திறமை மிக்க நிலையில் இருந்து வருகிறது. இதிலும் தனியாரை அனுமதித்துள்ளனர்.

ரயில்வே

மோடி அரசின் சமீபத்திய பெரும் தாக்குதல் இந்திய ரயில்வே தனியார்மயம் 109 இணை வழித்தடங்களில் 151 ரயில்களை தனியார் பிரிவு ரூ.30ஆயிரம் கோடி முதலீட்டில் இயக்கும் என அறிவித்துள்ளது. டிரைவரும்-கார்டும் மட்டுமே ரயில்வே துறை ஊழியர்கள். மற்ற அனை வரும் தனியார் ரயிலை இயக்கும் நிறுவனத்தின் பணியா ளர்களாக இருப்பார்கள். அந்நிறுவனங்கள் தாங்கள் விரும்பும் இடத்தில் ரயில் பெட்டிகளையும், இன்ஜின்களை யும் வாங்கிக்கொள்ளலாம் அப்படியென்றால் பெட்டிகள் மற்றும் இன்ஜின்கள் உற்பத்தி செய்யும் அரசு நிறுவ னங்கள் அதோகதி. சமூக பொருளாதார ரீதியாக ஒடுக்கப் பட்ட மக்களின் இடஒதுக்கீடு வேலை வாய்ப்பு, பெண்க ளுக்கான வேலை வாய்ப்பு அனைத்தும் பறிபோகும். மொத்தத்தில் சாதாரண மக்களின் பயன்பாட்டிற்கு தனியார் ரயில்கள் எவ்விதத்திலும் உதவிசெய்யாது.

விவசாயம்

வேளாண் துறையை முற்றிலுமாக கார்ப்பரேட் வசம் ஒப்படைக்கும் வகையில் அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் 2020, வேளாண் விளைபொருட்கள் வணிக ஊக்குவிப்பு 2020, விவசாயிகளுக்கான விலை உத்தரவாதம் மற்றும் வேளாண்மை மீதான ஒப்பந்த பாதுகாப்பு சட்டம் 2020 ஆகி யவை நிறைவேற்றப்பட்டுள்ளன. இச்சட்டங்கள் அனைத்தும் விவசாயிகள்-விவசாய தொழிலாளர்களை அவர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக மாற்றிவிடும்.

மின்சாரம்

மின்சார வரைவு மசோதா 2020 என்ற மசோதாவை மத்திய எரிசக்தி துறை, மாநில அரசுகளின் ஒப்புதலுக்காக அனுப்பியுள்ளது. இது நிறைவேற்றப்பட்டால் ஏழை, எளிய மக்கள், விவசாயிகள், கைத்தறி நெசவு தொழிலாளர்கள், விசைத்தறி தொழிலாளர்கள் உட்பட அனைவரும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். அதோடு மாநில உரிமையும் பறிக்கப்படும்.

புதிய கல்விக் கொள்கை

புதிய கல்விக் கொள்கையை தன்னிச்சையாக மோடி அரசு அறிவித்துள்ளது. ஜனநாயகத்தை குழிதோண்டி புதைப்ப தாகும். இதன் விளைவுகள் கொஞ்சம் நஞ்சம் அல்ல மும்மொழி என்ற பெயரில் இந்தி திணிப்பு, மாணவர்களு க்கு எவ்வகையிலும் பயன்தராத மொழியான சமஸ் கிருதம் திணிப்பு, கலைக்கல்லூரி படிப்பிற்கும் நுழைவுத் தேர்வு, பல்கலைக் கழகத் துணைவேந்தரை தில்லியே நியமிக்கும்,  மாநில அரசுக்கு உரிமை கிடையாது, இடை நிற்றல் அதிகரிக்கும். குலத்தொழிலை மறைமுகமாக ஊக்குவிக்கும், தன்னார்வத் தொண்டர்கள் என்ற போர்வை யில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்தோர்களும் வகுப்புகள் எடுப்பது, இந்தியா முழுவதும் ஒரே பாடத்திட்டம் என்ற பெயரில் ஆரிய பாடத்திட்டம் கொண்டு வரமுயற்சி மொத்தத்தில் இல்லாதவனுக்கு கல்வி மறுப்பு, வசதி படைத்தவனுக்கு கல்வி என்ற முறையில் கல்வியை வணிகமயமாக்கி வருகின்றனர். ஒட்டுமொத்தத்தில் நமது தேசிய சொத்துக்களும், அறிவுசார் உரிமை சொத்துக்களும் இப்போது பெரும் முதலாளிகளின் கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதுதான் சுயசார்பா?

பாஜக தலைமையிலான மோடி அரசின் நாசகர பொருளாதாரக் கொள்கையை எதிர்த்து தேசம் முழுவதும் ஊரடங்கின் போது கூட சிஐடியு மற்றும் மத்திய தொழிற் சங்கங்கள் இணைந்து பல்வேறு போராட்டங்களை துறை வாரியாகவும், தொழில் வாரியாகவும் நடத்திவந்துள்ளன அதன் தொடர்ச்சியாக வருமான வரி செலுத்தாத குடும்பங்க ளுக்கு மாதம் ரூ.7500/- 6 மாதங்களுக்கு வழங்க வேண்டும்,ஒரு நபருக்கு ஒரு மாதத்திற்கு 10கிலோ உணவு தானியம் வழங்கவேண்டும், 100நாள் வேலை திட்டத் திற்கான தினக்கூலி ரூ.600/-என நிர்ணயம் செய்ய வேண்டும், இத்திட்டம் நகர்புறத்திற்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும்,தொழிலாளர் விரோத. விவசாயிகள் விரோத கொள்கைகளை வாபஸ் வாங்க வேண்டும்.

பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு ரூ.50 லட்சம் காப்பீடு திட்டத்தை அமலாக்க வேண்டும்.

மருத்துவர், செவிலியர், தூய்மைபணியாளர், காவலர்க்கு மருத்துவ பாதுகாப்பு சாதனங்கள் வழங்க வேண்டும். சுகாதார திட்டத்தை பலப்படுத்த வேண்டும். புதிய தேசிய கல்விக் கொள்கையை திரும்பப் பெறவேண்டும்.

போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட்-8 அன்று அனைத்து தொழிற்சங்கம் சார்பில் நடைபெறும் தேசம் தழுவிய எதிர்ப்பு போராட்டத்திலும், ஆகஸ்ட் -10  அன்று தேசம்  காப்போம் என தொழிலாளர்கள், விவசாயி கள், விவசாய தொழிலாளர்கள், மாதர், மாணவர், வாலிபர் அமைப்புகள், வெகுஜன அமைப்புகள் இணைந்து நடத்தும் போராட்டத்தில் முககவசம் அணிந்து, தனிநபர் இடை வெளியை கடைப்பிடித்து ஆயிரம் ஆயிரமாய் பங்கேற் போம், அரசின் நாசகர கொள்கைக்கு முடிவு கட்டுவோம்.

கட்டுரையாளர் : மாநில துணை பொதுச் செயலாளர், சிஐடியு